Wednesday, January 30, 2019

வியூகம்




ஜெ

அஸ்வத்தாமனின் உள்ளத்தில் ஒரு வியூகம் எப்படி உருவாகிறது, அது எப்படி வளர்கிறது என்பதைப்பற்றிய வர்ணனை பார்த்தேன். நான் ஒரு கட்டிட வரைவாளர் –பொறியாளர். கட்டிடத்தை மனதில் ஒரு சின்ன ஐடியாவாகத்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அந்த ஐடியா இப்படித்தான் வரும். அந்த இடத்தைப் பார்த்ததுமே ஒரு கொந்தளிப்பு போல அந்த ஐடியா வந்துவிடும்.

அதன்பின் வரைந்து விடுவோம். பாகம்பிரித்து வேலை ஆரம்பிக்கும். வேலை நடக்கநடக்க நம் மனசிலிருந்து கட்டிடம் போயே போய்விடும். கொஞ்சநாள் கழித்து ஃபினிசிங் நடக்கும்போதுதான் மீண்டும் கட்டிடம் நம் கண்ணுக்குத்தெரியும். அடடா இது நமக்குள் இருந்ததா என்ற எண்ணம் வரும். பார்க்கப்பார்க்க சலிப்பாகவே இருக்காது. ஆனால் கட்டிமுடித்தபின்னர் மறுபடியும் குறைகள் மட்டும்தான் தெரியும்.

திருத்தித்திருத்தி ஒரு கட்டத்தில் அப்படியே விட்டுவிடவேண்டியதுதான். கடைசியில்தான் நமக்கு அந்தக்கட்டிடம் நம் படைப்பு என்ற நினைப்பே வரும். அந்த பலபடிகளை அந்த இடத்திலே வாசித்தேன். நன்றாக இருந்தது

செல்வக்குமார் டி.எம்