Monday, January 28, 2019

குந்தியின் ஆடல்




ஜெ

குந்தி கர்ணனை உளவியல் ரீதியாகத் தாக்குவதைத்தான் நாம் மூன்று அத்தியாயங்களிலே காண்கிறோம். ஆனால் கர்ணன் குந்தியை மிக வலுவான ஓர் உளவியல் ஆயுதத்தால் தாக்கிவிட்டான். அவன் குந்தியிடம் கேட்கிறான் “சொல்லுங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி, உங்களுக்கிணையான அரியணையில் ராதையை உங்களால் அமரச்செய்ய இயலுமென்றால் சொல்க! உங்களை அன்னையென்று நானும் அவையில் ஏற்றுக்கொள்கிறேன்

குந்தியை விஷக்கத்தியால் குத்துவதுபோன்றதுதான் அது. அவளால் அதை தாளவே முடியாது. ஏனென்றால் அவள் வாழ்க்கைமுழுக்க வெறுத்துவந்தது ராதையைத்தான் என எவரும் ஊகிக்க முடியும். அவளுடைய இடத்தில் இருப்பவள். அவள் மகனை கொஞ்சி வளர்ப்பவள். ஆகவேதான் அவள் மேலும் சற்றுநேரம் கழித்து இன்னும் கூர்மையாகத் திருப்பி அடிக்கிறாள்.

அவள் கர்ணனிடம் சொல்கிராள். உனக்கு ராதை அணுக்கமானவள் அல்ல. எந்தப்பெண்ணும் அணுக்கமானவள் அல்ல. நீ தன்னந்தனியானவன் என்று. அவனை வீழ்த்தியபின் நீ அம்மாப்பையன் என்கிறாள். அதாவது ராதை உன்னை அணுகவே இல்லை, நான் அணுகிவிட்டேன் என்று. அந்த மனவிளையாட்டு நம் சூழலில் இருந்தே புரிந்துகொள்ளக்கூடியதுதான்

சாரங்கன்