Wednesday, January 30, 2019

பெண்கள் அறிந்தவன்




அன்புள்ள ஜெ

குந்தி கிருஷ்ணனைப்பற்றிச் சொல்லும்போது அவன் இந்த யுகத்தின் நாயகன் அடுத்த யுகத்தின் சிருஷ்டிகர்த்தா என்று சொல்லும் இடம் என்னை மெய்சிலிர்க்கச்செய்தது. என்னதான் தன் பிள்ளைகளைப் பற்றியே கவலைப்படுபவளாக அவள் இருந்தாலும் அவளுக்கு உண்மையில் இளைய யாதவன் யார், எதற்காக பிறப்பெடுத்திருக்கிறான் என்பதெல்லாம் தெரிந்திருக்கிறது. வெண்முரசில் வரும் எல்லா பெண்களும் கிருஷ்ணனை அணுக்கமாக அறிந்திருக்கிறார்கள். அறியாதவர்கள் ஆண்கள் மட்டும்தான். பெண்ணாக இருந்தமையால்தான் அர்ஜுனனால் கண்ணனை அறியமுடிகிறது

சம்பத்குமார்