Friday, October 31, 2014

போரின் முடிவில் -பிரயாகை



ஜெ

போர்முடிந்ததும் நான் அடைந்த வெறுமையை என்னவென்று சொல்வேன்[ பிரயாகை] இதுதான் மகாபாரதத்தில் வரும் முதல்போர் இல்லையா? அந்தக் கடைசிப்போரையே நேரில் பார்த்ததுபோல் இருந்தது. இருபக்கமும் மாவீரர்கள். இரு பக்கமும் மாறிமாறி வெற்றிதோல்விகள். இருபக்கமும் நியாயங்கள்

ஆனால் கூடவே எல்லா அறமும் பறந்து போய்விட்டது. ஆரம்பத்திலேயே. போர் என்றால் அவ்வளவுதான் என்று சொல்கிறீர்களா என்ன? இல்லை மகாபாரதமே அப்படித்தான் சொல்கிறதா? பெரியதீமையை சிறிய தீமை அழிக்கிறது என்பதுதான் போரா

எனக்குப்பட்டது இந்தச் சின்னப்போரில் கௌரவர்களும் பாண்டவர்களும் தோற்றிருந்தால் எல்லாம் சரியாக முடிந்திருக்குமே என்று. அவர்களுக்கு ஆணவம் வந்திருக்காது. பெரும் போர் வந்திருக்காது

முட்டாள்தனம்தான். ஆனால் அப்படித் தோன்றியது. போர் முடிந்ததும் என்னதான் மிச்சம் என்று தோன்றுமே அந்த இடம் முதலிலேயே இந்தப்போரிலேயே வந்துவிட்டது

சிவம்