Monday, October 20, 2014

நீலம்- காத்திருப்பு






அன்புள்ள ஜெ சார்,

இவ்விரண்டு அட்டைப்படங்களும் எனக்குப் பிடித்திருக்கின்றன.

வாசகர்கள் அனைவரையும் நண்பர்களாகக் கருதி எங்கள் விருப்பங்களையும் கேட்டிருப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. வெண்முரசு ஒரு கூட்டு வாசிப்பாக நிகழ்ந்து வரும் நிலையில் இது இன்னுமொரு கூட்டுப் பங்களிப்பு. வெண்முரசு தினம்தோறும் வளர்ந்துவருகிறது; எனக்குள்ளும்.

பிரயாகையின் வரவுக்காகக் காத்திருக்கிறேன்; கனவில் கூட வெண்முரசு இடம்பிடித்து விட்டது. இன்று கனவில் பிரயாகை நூலாக என் கைகளில் தவழ, அதனுடைய ஓவியங்களைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். விழித்தவுடன் தான் கனவென்று அறிந்தேன்.

(தங்களிடம் இதைப் பகிரலாமா வேண்டாமா என்று காலை முதல் தயங்கிக்கொண்டிருந்தேன். ஆனால் நீலம் அட்டைப்படம் கருத்துக்கேட்பு பதிவைப் பார்த்தபின்பு என் கனவைத் தங்களிடம் பகிராவிட்டால் நான் பகிர்வதற்கு வேறு யாருமில்லை எனத் தோன்றியது; தவறாக இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.)

நன்றிகள் ஜெ சார்.

இப்படிக்கு
தினேஷ்