Sunday, January 17, 2016

சூரியனானவன்

ஜெ

கர்ணன் அந்த காலொடிந்த குதிரையை ஏற்றிக்கொள்ளும்போது அவனைச் சூதன்மகன் என்று அடையாளம் கண்டதாக ஒருவர் எழுதியிருந்தார். கர்ணன் சூரியன் மகன் அல்லவா? நான் சூரியனின் குதிரை அது. ஆகவே அவன் அதை கருணையுடன் கூட்டிக்கொண்டுதான் செல்வான் என்றுதான் நினைத்தேன். சூரியனுக்குக் குதிரைபோல அற்புதமான இமேஜ் வேறு இல்லை. சூரியக்கதிர்களை குதிரை என்று கற்பனைசெய்துகொண்டவன் மாபெரும் ஞானி

சூரியசிலை எங்களூர் கோயிலில் இருக்கிறது. நான் ஒவ்வொருமுறையும் அதனருகே சென்று நிற்கும்போது கர்ணனைத்தான் நினைத்துக்கொள்வேன்

சரவணன்