Sunday, October 7, 2018

மீறல் 2


அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் எல்லைமீறி மற்றவர்களுக்கு அதை உதாரணமாக ஆக்கினார் என்று ஒருவாசகர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். நன்றாகப்பார்த்தால் அவர் எல்லை மீறவில்லை, அவராலும் மீறமுடியவில்லை என்பதைத்தான் காண்கிறோம். மனிதனாக எல்லைமீறப்போகிறார். தெய்வமாக எல்லைகளை மீறாமல் திரும்பி வந்துவிடுகிறார். அவர் அதற்குச் சொல்லும் காரணங்கள் என்னவாக இருந்தாலும் அவரால் எல்லையை மீறமுடியவில்லை, தன் சொல்லைக் கடக்கமுடியவில்லை என்பதுதானே உண்மை?

சாரங்கன்