Saturday, October 6, 2018

கிருஷ்ணனின் மீறல்




ஜெ,

கிருஷ்ணன் பீஷ்மருக்கு எதிராக சக்கரம் தூக்கியது மூலமகாபாரதத்தில் இல்லாதது. ஆனால் பல வட்டார மகாபாரதங்களில் உள்ளது. அந்தக்காட்சி எந்தவகையில் வெண்முரசுக்கு உதவுகிறது என்று யோசித்துப்பார்த்தேன். இந்த நாவலே எல்லைமீறலின் கதை. ஆகவே பீஷ்மரின் எல்லைமீறலை நான் எதிர்பார்க்கிறேன். பீஷ்மரின் எல்லைமீறலை இன்னும் அர்ஜுனன் தவறாக நினைக்கவில்லை. அவனையும் எல்லைமீறச்செய்கிறார் கிருஷ்ணன். அவரே மீறிக் காட்டுகிறார். அதைத்தொடர்ந்தே எல்லாரும் எல்லைகளை மீறுகிறார்கள் என நினைக்கிறேன்

சரவணக்குமார்