Wednesday, October 24, 2018

ஓநாயின் கதை




அன்புள்ள ஜெ

ஒரு கணத்தில் வெண்முரசு ஓநாய் குறித்து அளித்திருக்கும் அத்தனை படிமங்களையும் தொகுத்துக்கொண்டேன். முதல்முறையாக காந்தாரியும் சகுனியும் மழைப்பாடலில் பார்த்த ஓநாய். அதன்பின் அவன் வாழ்வின் திருப்புமுனைகளுக்கெல்லாம் காரணமாக அமைந்த ஓநாய். அவனுக்கு கணிகரே ஓநாய் வழியாகவே அறிமுகம். எதுவும் வேண்டாம் என்று விட்டுச்சென்ற அவனை நஞ்சூட்டி திருப்பி அனுப்பியதும் ஓநாய்தான். அந்தப் பசித்த பாலைவன ஓநாய் இன்று குருதி நாவருகே வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிடுகிறது. எத்தனை மடிப்புகளாக வந்துகொண்டே இருக்கும் கதை!

சரவணன்