Monday, October 8, 2018

குண்டாசியின் மாற்றம்


குண்டாசியின் மாற்றம் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். குண்டாசியில் மாற்றமே இல்லை. அவனிடம் ஆரம்பம் முதல் இருந்தது குற்றவுனர்ச்சி மட்டுமே. அதை இப்போது இத்தனைபேர் சாவது நிறைவளிக்கிறது. ஆகவே அவனால் அதைச் சிறப்பாகச் செய்யமுடிகிறது. இந்த அழிவுதான் அந்தப்பாவத்துக்கான பிராயச்சித்தம் என அவன் நினைக்கிறான். அவனால் இதைத்தான் சரியாகச் செய்யமுடியும். சொல்லப்போனால் அவன் இத்தனைநாள் காத்திருந்ததே இதற்காகத்தான்

ஜெயராமன்