Monday, October 15, 2018

பழி




ஜெ


கிருதவர்மன் யாதவர்களிடம் சொல்கிறான்


அந்த வரி என்னை ஒருவகையான பரபரப்பை நோக்கி கொண்டுசென்றது. நீலம் நாவலில் இருந்தே இது வந்துகொண்டிருக்கிறது. கம்சன் குழந்தைகளைக் கொன்றபோது கைகட்டி அஞ்சி இருந்தார்கள் யாதவர்கள். அந்தப்பழிக்காக கிருஷ்ணன் அவர்களை கொன்றழித்தான். ஆனால் அப்போது யாதவக்குலம் என்ன செய்தது? இப்போது கிருஷ்ணனுக்கு எதிராக எழுபவர்கள் அன்றைக்கு என்ன செய்தார்கள்? அந்தப்பழியில் இருந்து அவர்கள் தப்பமுடியுமா என்ன? அதைத்தான் கிருதவர்மன் சுட்டிக்காட்டுகிறான். மௌசாலபர்வத்தில் யாதவர்கள் முழுமையாக அழிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவையெல்லாம் அரசியல் காரணங்கள். உண்மையான ஆன்மிகமான காரணம் இதுதான்

ராஜ்