Sunday, October 21, 2018

உணர்வுகள்




அன்புள்ள ஜெ

சீற்றம் கொண்ட சாத்யகி வெறியில் சிரித்துக் களியாடுவதைக் கண்டபோது எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. ஏனென்றால் இதை நானே பார்த்திருக்கிறேன். என் உறவுக்காரர் ஒருவரின் மகன் கார் விபத்தில் இறந்துவிட்டான்.  அவன் தாயார் அந்தச் சாவுவீட்டில் ஹைப்பர் ஆக்ஷன் கொண்டவராக இருந்தார். சிரித்தார். எல்லாரையும் உபசரித்தார். சத்தம்போட்டு பேசினார். மனம் கலங்கிவிட்டது என நான் நினைத்தேன். ஆனால் சட்டென்று அலறிக்கொண்டு ஓடிப்போய் தூணில் மண்டையை முட்டிக்கொண்டார். அந்தக்காட்சி ஞாபகம் வந்தது

வினாயகமூர்த்தி