Saturday, October 11, 2014

தென்னகச் சித்திரங்கள்




அன்புள்ள ஜெமோ

வெண்முரசு இருநாவல்களை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். மழைபபடல், வண்ணக்கடல். இரண்டும் இரண்டுவகையான அனுபவங்கள். நிலம் என்றவகையில் மகாபாரதம் நிகழும் இடங்களை மட்டுமே காட்டியது மழைப்பாடல். அஸ்தினபுரி, காந்தார நாடு, சதசிருங்கம் எல்லாம் கண்முன்னால் காட்சியாக வந்திருந்தது

ஆனால் மகாபாரதம் நடக்காத இடங்களான தென்னாடு, வேசரநாடு கலிங்கநாடு போன்றவற்றையும் ஆசுரம் போன்ர நிலப்பரப்பையும் விரிவாகவும் நுணுக்கமாகவும் காட்டியது வண்ணக்கடல்

இந்த வேறுபாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா

செந்தில்



அன்புள்ள செந்தில்

ஆம்.

பாரதம் என்றால் பாரத மண்ணேதான். மகாபாரதத்தில் மொத்த பாரதம் பற்றியும் குறிப்புகள் உ:ள்ளன. ஆனால் அவற்றை ‘நேர்க்காட்சியாக’ காட்ட இடமே இல்லை. கதை சூடுபிடித்தபிறகு சொல்லமுடியாது. சகதேவனின் படையெடுப்பிலேதான் அதன்பின் தென்னகம் வருகிறது. அர்ஜுஜனின் அஸ்வமேதத்தில் வடகிழக்கு வருகிறது. பாரத்தப்போர் முடிந்ததும் மகாபாரதம் முடியும் மனநிலை வந்துவிடும். அதன்பின் இந்தியவர்ணனை சாத்தியமல்ல.

ஆனால் அதையெல்லாம் சொல்லாமல் நாவலை எழுதவும் முடியாது. ஏனென்றால் அது வியாசன் சொன்னது. அதோடு அந்தப்பகுதிகளை எல்லாம் இப்போதே சொல்லாவிட்டால் பிறகு அவை குறிப்பிடப்படும்போது அவை கண்ணில் விரியாது. ஆகவேதான் வண்ணக்கடல் இந்தியாவின் தெற்கே ஆரம்பித்தது

ஜெ


மழைப்பாடல் பற்றி கேசவமணி

மரபின் மைந்தன் எழுதும் தொடர் முதற்கனல் பற்றி