Thursday, March 23, 2017

மானுட உறவுகளின் கதை






ஜெ,

வெண்முரசின் மாமலரை இதுவரை வந்த நாவல்களிலேயே செறிவானது என்று சொல்லலாம். இப்படி எல்லா நாவல்களுக்கும் சொல்வார்க்ள்தான். முன்னர் வந்தநாவல்களில் தத்துவச்செறிவு இருந்தது. தத்துவமே செறிவானதுதான். ஆகவே அந்த இறுக்கமும் தீவிரமும் ஆச்சரியப்படுத்தவில்லை.

 ஆனால் இது முழுக்கமுழுக்க மானுட உறவுகளின் கதை. ஆகவே இதன் செறுவு ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே அத்தியாயத்தில் எத்தனை விஷயங்கள் வந்துசெல்கின்றன. பலவர்றை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியவில்லை. நாவலாக வந்தபின்னர்தான் நினைவில் நிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

உதாரணமாக, இந்திரன் சச்சியை எந்தெந்த வடிவில் எல்லாம் வந்து சந்திக்கிறான் என்னும் பகுதி. அதேபோல அவன் வளையல்போடவரும் அந்த இடமே ஒரு நல்ல சிறுகதை. வளையலுக்குள் கை நுழைவதை யானை கோட்டைக்குள் நுழைவதுபோல என்றும் கைமுண்டுகளை மத்தங்கள் என்றும், சொல்லியிருக்கும் இடமெல்லாம் கிளாஸிக்

ஜெயச்சந்திரன்