Monday, March 6, 2017

ஊர்வசியின் புதிர் 4




ஜெ

ஊர்வசியின் நிபந்தனைகளைப்பற்றி நான் மிகவும் யோசித்துப்பார்த்தேன். அவசரப்பட்டு சொல்லிவிடக்கூடாதே என்று நினைத்துக்கொண்டேன். முதலில் நான் கவனிக்கவிட்டது ஒன்று உண்டு அவள் அவனை நிர்வாணமாக முன்னாடியே பார்த்திருக்கிறாள் என்பதுதான் அது. அவளை அசுரன் கேசி கவர்ந்துசெல்லும்போது அவன் நிர்வாணமாகச் சென்றுதான் காப்பாற்றுகிறான்

அந்த நிர்வாணத்தின் நினைவால்தான் அவள் தப்பாக ஆடுகிறாள். ஆகவேதான் சாபம் பெற்று மண்ணுக்கு வருகிறாள். அந்த சாபத்தை மறந்து இங்கே பெண்ணாக வாழ்கிறாள். ஆகவேதான் அவளுக்கு அந்த நிர்வாணம் மீண்டும் அனைத்தையும் ஞாபகப்படுத்தி அவள் ஒரு தேவகன்னிகை என்பதை ஞாபகப்படுத்தி அவளை மேலே திரும்பிச்செல்லவைக்கிறது

மனித உடல்மேல் கொண்ட காமத்தால் எப்படியெல்லாம் இழிந்து மண்ணுக்கு வந்து ஒரு கனவுக்குள் வாழ்ந்தோம் என அவள் நினைக்கிறாள். அந்தக்கனவு கலைந்துவிடுகிறது. ஆனாலும் அவள் அடிக்கடி அந்தக்கனவுக்குள் வந்து திரும்பிச்செல்கிறாள்

மகாதேவன்