Sunday, March 19, 2017

தேடுதல்





ஜெ

சாதாரணமாக வந்துசெல்லும் ஒரு வரி மொத்தமாக வெளியே கொண்டுபோய் நினைவுகளில் ஆட விடுவதுதான் நான் வெண்முரசு வாசிக்கும்போது பெற்றுக்கொள்ளும் முக்கியமான அனுபவமாக இருக்கிறது
தேடும் விழிகளிலிருந்து நாம் ஒளிந்து கொள்ளலாம். அஞ்சும் விழிகளிலிருந்து தப்புவது மிகக்கடினம். அன்பு கொண்ட விழிகளிலிருந்து தப்புவது எவராலும் இயலாது

இதை காதல்கொண்ட அனைவரும் அறிவார்கள். ஆயிரம்பேர் கொண்ட கூட்டத்திலும் நம் அன்புக்குரியவர் இருந்தால் முதல்கணத்தில் ஒரு சின்ன அசைவிலேயே தெரிந்துவிடும்

எஸ்