Saturday, March 18, 2017

விளையாட்டு’





அன்புள்ள ஜெ

மாமலரின் இந்த அத்தியாங்களின் ‘விளையாட்டு’ ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. முந்தைய பகுதியில் ஊர்வசியிடம் பீமன் அல்லது புரூரவஸ் கேட்ட கேள்விக்கு என்ன பதில் என்பதுதான் விசித்திரமானதாக இருந்தது. இதில் அப்படி என்ன கேட்டிருப்பான் என்றே யோசிக்கவைத்துவிட்டீர்கள். கேள்வி என்ன பதில் என்ன இரண்டுமே மர்மமாக இருந்தன. ஆகவே கேள்விக்குள் செல்லும்பொருட்டே கதையை திரும்ப மண்டைக்குள் ஓட்டிக்கொண்டிருக்கவேண்டியதாக இருந்தது

ராஜ்மோகன்