Thursday, March 9, 2017

ஊழ்




 “ஊழென்பது உடலிலேயே பொறிக்கப்பட்டுள்ளது என்றொரு முதுசொல் உள்ளது. நீங்கள் எவரென்பது உங்கள் தசைகளில், விழிகளில், நாவில், எண்ணங்களில் பிறப்பதற்கு முன்னரே எழுந்துவிட்டது. பிறிதொன்றை நீங்கள் ஆற்ற முடியாது. சிட்டுக்குருவியின் சிறகுகள் துள்ளுவதும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் சாமரமாவதும் பயிற்சியால் அல்ல.” அனுபவ உண்மை.அருமை 

நடராஜா விஜயேந்திரன்


அன்புள்ள நடராஜா

ஆம், நல்ல வரி. நானே இப்போதுதான் கவனித்தேன். வரிகளை நான் அந்தந்த கதாபாத்திரங்களாக நின்று எழுதுவதனால் பெரும்பாலும் தனியாக அறிவதேயில்லை

ஜெ