Thursday, March 9, 2017

கதைச்சட்டங்கள்



அன்புள்ள ஜெ

வெவ்வேறு பெண்களின் குணச்சித்திரங்கள் வெண்முரசில் வந்துகொண்டே இருந்தாலும் அசோகசுந்தரியைப்போல ஒரு கதாபாத்திரம் வரவே இல்லை. அவளை மிகச்சரியாகவே வைர மலர் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதுவுமே அவளில் படியாது. வெறும் ஒளி. அழகு. அப்படியே இருந்துசென்றுவிடுவாள்

மாக்யூஸ் நாவலில் ரெமிடியோஸ் ப்யூட்டி என்னும் கதாபாத்திரம் வரும். அதை நினைவூட்டுகிறது அக்கதாபாத்திரம்

ரவிச்சந்திரன்


அன்புள்ள ரவிச்சந்திரன்

Rape of the innocent என்பதும் காவியங்களில் உள்ள ஒரு நிரந்தரக்கதை அல்லது தொன்மம்

மகாபாரதம் தொன்மப்பெருக்கு. ஆகவே எல்லா கதைகளுக்குமே இந்த template தன்மை உண்டு. அதை நான் ஒரு சாதக அம்சமாகவே நினைக்கிறேன். அதை நுட்பங்கள் அளித்து விரிவாக்கம் செய்கிறேன்

ஜெ