Wednesday, March 15, 2017

முழுமையான வாழ்க்கைகள்





அன்புள்ள ஜெ

வெண்முரசின் முந்தையநாவல்களை விட வேகமாகச் செல்கிறது மாமலர்.மற்ற நாவல்களில் இருந்து இதற்கு இருக்கும் வேறுபாடு என்னவென்றால் இதில் முழுமையான வாழ்க்கைகள் இருப்பதுதான். ஆகவே நாவலில் பிறப்பும் இறப்பும் வந்துகொண்டே இருக்கின்றது. முழுவாழ்க்கைகளாக வாசிப்பது ஒட்டுமொத்தமாக என்ன நடக்கிறது என்ன மிஞ்சுகிறது என்பதைப்புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. மிகப்பெரிய அனுபவம் அது. ஆயுஸ் நாவலில் ஒரு சின்ன கதாபாத்திரம்தான். ஆனால் அவன் வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய நாவலாக விரிகிறது நம் மனதில். இந்த அம்சத்தால் மாமலர் தனித்துவம்கொண்ட நாவலாக ஆகிறது

மனோகரன்