Monday, March 27, 2017

மனதத்துவ வலை





அன்புள்ள ஜெ

புலிகளைக்கொண்டு கட்டப்பட்டுள்ள நுட்பமான மனதத்துவ வலை ஆச்சரியமூட்டுகிறது. முதலில் நான் புலிகள் தேவயானியின் மனம் அல்லது ஆழ்மனம் என நினைத்தேன். ஆனால் பிற்பாடு அவை கசனின் மனமாகவும் மாறின. ரெண்டுபேருக்கும் பொதுவான ஒரு மனோநிலையாக தனியாகப்பிரிந்து விளையாடின. கசனின் மனம் புலியாக தேவயானியிடம் வந்தது. தேவயானி மனம் கசனிடமும் சென்றது.

புலிகளின் பாவனைகள் சூட்சுமமாக எழுதப்பட்டுள்லன. அவை அவர்களின் மனம் என்று நினைத்தால் அந்த எல்லா நுட்பங்களும் மனதைப்பற்றியவை ஆகிவிட்டன. கைநகங்களை உள்ளே இழுத்துக்கொள்ளுவது ஓசையில்லாமல் நடப்பது எல்லாமே அழகான குறியீடுகளாக ஆகிவிட்டன

செல்வக்குமார்