Saturday, August 11, 2018

தன்னைப்பலிகொடுப்பது

ஜெ

பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வந்த ஒரு வரி என்னை திகைக்க வைத்திருக்கிறது - தன் குழந்தைகளை தானே கொல்லும் சமூகம் எதையும் வெல்லும். ஏனென்றால் அதற்கு எந்த மதிப்பீடும் இல்லை. அது தனக்குத்தானே கூட இரக்கம் காட்டிக்கொள்வதில்லை.  ருஷ்ய சமூகம் அத்தகையதாக ஸ்டாலின் காலகட்டத்தில் இருந்தது.

அதே குழந்தைப்பலியை மகாபாரதத்தில் விரிவாக அரவான் வழியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். ஈவிரக்கமே இல்லாத போர் ஒன்றை தொடங்க சிறந்த வழி தன்னில் ஒரு பகுதியை வெட்டி வீசி தானே தனக்கு இரக்கமில்லாதவன் எதையும் செய்பவன் என்று ஆவதுதான் என அந்தக்கதை சொல்கிறது

அருண்