Tuesday, August 14, 2018

சாரதி


ஜெ,

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன சாரதியாகச் செல்லும் காட்சி எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் நேரடியாகவே சொல்லப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் போர்க்களக்காட்சிகள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரியாகவும் அவை உள்ளன. எந்த விதமான உவமைகளும் இல்லை. பெரிய விவரணைகளும் உணர்ச்சிகளும் இல்லை. ஆனால் உண்மையான ஒரு தீவிரம் வந்துள்ளது. ஆகவே அந்தப் பீலிவிழி கண் திறந்திருப்பது அற்புதமான ஒரு தரிசனமாக அமைந்தது

சரவணன்