Friday, August 24, 2018

போர் தொடக்கம்



அன்புள்ள ஜெ

           போர்துவங்கிவிட்டது பெருங்களிறுகளனெ நாளுக்கு நாள் முழுமைநோக்கி சொல்லில் எழுந்தவர்கள் மீண்டும் சொல்லுக்குள்ளாகவே அமிழ்ந்தெங்கோ செல்கிறார்கள். 
கைகெட்டும் தூரத்தில் மிக அனுக்கமாக உணர்ந்த ஒவ்வொருவரும் இனி இல்லாமலாவதை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

பெரும்புயலக்கு தன்னை முழுதளித்தவர்களாகவே ஒவ்வொருவரும் போரை நோக்கி வருகிறார்கள் 
இக்கணத்திற்கு முன் படைகள் அடைந்த சோர்வும் களியாட்டும் இரக்கமின்மை கோறி நின்ற கடைசிதுளி குருதியும் வேண்டுமென உறுதி வேண்டிநின்ற எதோ போர்த்தெய்வம் ஏற்படுத்திய விழிமயக்கு போல் உள்ளது.

களத்தில் எதிரி முழுவிசையுடன் எழுதல் வேண்டி நின்றுள்ளார் பிதாமகர் பீஷ்மர் பாண்டவ படைகளில் இன்று அது அர்ஜூனன் அல்ல.  களத்தில் முதற்பலி என்பதே பெரும்பேறு என ஊழியை நோக்கி போருக்கெழுந்து வீரவிராடர் என சொல்லில் நிலைநின்ற உத்ரன் இன்று போர்த்தெய்வம் உத்ரனை தேர்ந்தெடுத்துள்ளது..

தங்கராஜ்