Wednesday, August 8, 2018

அறம்





அன்புள்ள ஜெ சார்

துரோணரும் பீஷ்மரும் தங்கள் இறப்பைப்பற்றி யுதிஷ்டிரருக்குச் சொல்லும் இடம் முக்கியமானது. அவர்கள் பூடகமாக தங்கள் முடிவைத் தாங்களே சொல்லிவிடுகிறார்கள். அதோடு அவர்கள் அறம் வாழ்க என்று மட்டும்தான் சொல்கிறார்கள். காந்தாரி சொன்ன அந்த வரியை தொடர்ச்சியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் மிக அழகாக உள்ளது. அறம் பயின்ற எனக்குத் தெரியாத்து கண்களை மூடி வீட்டில் இருக்கும் காந்தாரிக்குத்தெரியும் என்று பீஷ்மர் சொல்லுமிடத்தில் பெரிய பரவசம் ஏற்பட்டது  எனக்கு.

மாதவன்