Friday, August 31, 2018

இரு கட்டுரைகள்




அன்புள்ள ஜெ

ஈரோடு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தளத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன். பிரபு மயிலாடுதுறை எழுதிய கட்டுரைகளில் பல செய்திகளைத் தொகுத்து அளிக்கிறார். வெண்முரசை ஆங்காங்கே வாசிப்பவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

வெளிவந்த கட்டுரைகளில் அருணாசலம் மகாராஜனின் கட்டுரை மிகச்சிறப்பானது. கிராதம் நாவலின் அழகியம், தரிசனம் இரண்டையும் அற்புதமாகச் சொல்கிறார். ராஜகோபாலன் ஜானகிராமன் முன்பு எழுதிய கட்டுரையும் இதைப்போலவே எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

ஆர்.ராஜ்மோகன்



கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்