Monday, August 6, 2018

பயணம்




ஜெ வணக்கம்...

செந்நா வேங்கையில் நான் சுவாரசியமாக கவணித்துக் கொண்டு வருவது, எப்படி உங்கள் பயண அநுபவங்கள், நாவல் காட்சிகளாக மாறுகின்றன என்பதையே. இந்த தலைப்பில் ஒரு சுவாரஸியமான ஆய்வு செய்யலாம்.

குறிப்பாக மூன்றை இங்கே கூற முடியும். முகங்களின் தேசத்தில், ஒட்டகமும் நடுதெருவும் என்ற தலைப்பில் 1989ல் குவாலியரில் இருந்து ஜெய்சல்மருக்கு மணற் புயலின் ஊடே பேருந்தில் ஐந்து நாட்கள் பயணித்து சென்றதை எழுதியிருந்தீர்கள். அந்த பயணத்தில், வழி தோறும், செம்புழுதியால் ஆனவர்களை போல மக்கள் என்ற குறிப்பு வரும்.
செந்நா வேங்கையில் பாண்டவர் படை நகர்வை விவரிக்கையில் அதே புழுதியால் ஆன படை மாந்தர்கள்


கௌரவர்களின் குருதிக் கொள் கொற்றவை ஆலையத்தில் திரை சீலையில் தெரியும் சுடரின் நிழல் வடிவம், கர்நாடகத்தில் உள்ள சாயா சோமஸ்வர ஆலயத்தின் வழிப்பாட்டு முறையை ஒட்டியுள்ளது.

எனக்கு முத்தாய்பாக பட்டது, பந்தாட்டம். 2016ல் உங்கள் ஐரோப்பா பயணத்தின் பொழுது, பாரீஸ் வீதிகளில், யூரோ கால் பந்து போட்டிகளின் கோண்டாடங்களின் நடுவே, ஐஃப்பீல் டவரிலிருந்து திரும்பி கொண்டிருந்தோம். முதல் உலக போரில், கால் பந்தாட்டத்தை பற்றி பேச்சு எழுந்தது. 

1914ல், போரின் துவக்க மாதங்களில், கிறிஸ்மஸையொட்டி, "Christmas Truce" என்ற அதிகாரபூர்வமற்ற போர் நிறுத்தங்கள், பல்லாயிர கிலோமீட்டர் போர்முகப்பில் கடைபிடிக்கபட்டன. இரு படைகளின், படை குழிகளின் (trench) நடுவே இருந்த "no man's land"ல் இரு படையினரும் கால்பந்தாட்ட போட்டிகளை ஒருங்கிணைத்தனர். 

செந்நா வேங்கையில், அச்சம்பவம், சரியாக பொருந்தியது.

அன்புடன்

சதீஷ்