Wednesday, August 15, 2018

களப்பலியின் அமைப்பு




ஜெ

அரவான் களப்பலியாகும் முடிவை படிப்படியாக கொண்டுசென்று சேர்த்திருந்த விதம் என்னை பதற்றம் கொள்ளச் செய்தது. அரவான் களப்பலியாவது நான் எதிர்பார்த்திருந்ததுதான்.ஆனால் வேறுவழியே இல்லாததுபோல ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பொருந்தி சீராகச் சென்று அங்கே முடிந்தபோது அது விதிதான், வேறு ஒன்றுமே செய்வதற்கில்லை என்ற எண்ணத்தை அடைந்தேன். மகாபாரதத்தில் வரும் சம்பவங்களைக்கொண்டு மட்டுமே அந்த இடம வரை கொண்டுசென்று சேர்த்தது சிறப்பு . அரவானின் குணச்சித்திரத்தை முழுமையாக நிறுவி அவனை நாம் நம்மபையன் என்று நினைக்க ஆரம்பித்தபின்னர் அவனுடைய களப்பலி பற்றியச் செய்தி வருகிறது. அதுதான் பதற்றம் அளிப்பதாக இருக்கிறது

செந்தில்குமார்