Sunday, August 19, 2018

களப்பலி




அன்புள்ள ஜெ

அரவானின் அந்தக் களப்பலி மிகவேகமாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. அது அப்படி நடந்ததுதான் பதற்றத்தை அளிப்பதாக இருந்தது. அதுவரைக்குமான படைநகர்வுகளை எல்லாம் நுணுக்கமாகச் சொல்லிவந்திருந்ததனால் இதையும் அணுவணுவாக விவரிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். அப்படி சட்டென்று அது முடிந்தது பெரிய அதிர்வை உருவாக்கியது. ஏனென்றால் விபத்துக்கள் எல்லாம் அப்படித்தான் நடக்கின்றன. என்ன விஷயம் என்றால் சங்கன் உள்ளிட்ட எல்லாருக்குமே அது நடக்கும் என்று தெரியும். ஆனால் அவர்களும் அதை எதிர்பாராத அடி மாதிரித்தான் அடைகிறார்கள். நம் மனம் அப்படித்தான் செயல்படுகிறது. சில விஷயங்கள் நடக்கவே நடக்காது என்று நாம் எப்படியோ முடிவுசெய்துவிடுவோம். அந்த முடிவு உருவாக்கிய அதிர்ச்சியில் இருந்து நெடுநேரம் விடுபடவே முடியவில்லை

ஆர். கார்த்திக்