Monday, August 27, 2018

போர்த்தேவி



அன்புள்ள ஜெ

போர்க்களத்தில் எப்படி சிதைகள் ஒருக்கப்படுகின்றன, எப்படி பிணங்கள் எரியூட்டப்படுகின்றன என்ற காட்சிகள் நுட்பமாக விவரிக்கப்பட்டிருந்ததும் போர்க்களத்தில் காயம்பட்டு சாகக்கிடக்கும் வீரர்கள் தேறமாட்டார்கள் என்றால் அவர்களைக் கொலைசெய்யும் காட்சியும் ஒரு போர் என்றால் எத்தனை கொடுமை என்று காட்டுகின்றன. அதிலும் குத்திக்கொல்பவர்களுக்கு எத்தனை கச்சிதமும் தேர்ச்சியும் இருக்கிறது என்பது மிகப்பெரிய ஒரு விஷயம். எதையும் ஆயிரக்கணக்கான முறைசெய்துவிட்டால் கொடுமையானதானாலும் அது பழகிப்போய் திறமை மட்டுமாக ஆகிவிடுகிறது. அதன்பின் அதைச்செய்வதில் ஓர் இன்பம்கூட இருக்கலாம்

மோகன்குமார்