Saturday, February 24, 2018

துன்பங்களுக்குக் காரணம்




என்று துரியோதனன் சொல்லும் இடம் கர்ணனை மிகச்சரியாக வகுத்துச் சொல்கிறது. ஆகவேதான் அவன் மனம்தளர்ந்துவிடுகிறான். கர்ணனை அப்படி அணுக்கமாக அறிந்து சொல்ல துரியோதனனால்தான் முடியும். கர்ணன் அதற்குமேல் ஒன்றுமே சொல்வதற்கில்லை. அவனுடைய அத்தனை துன்பங்களுக்கும் காரணம் குந்திதான் என்பதை அந்தச்சபையில் துரியோதனன் குறிப்புணர்த்திக்காட்டிவிட்டான். அதற்குமேல் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட கர்ணனால் சொல்லமுடியாது. கர்ணனின் வஞ்சம் கசப்பு வீழ்ச்சி தர்மச்சரிவு எல்லாமே இதனால்தான். கர்ணனுக்கு மட்டும் தத்துவத்தேடலோ ஆன்மிகமோ ஒன்றுமே இல்லை. அவன் மண்ணோடு கட்டப்பட்டவன். அது இதனால்தான்

அதோடு இன்னொன்று உண்டு. நம்மைப்பற்றி ஒருவர் தெளிவாக அறிந்து நம்மிடமே சொன்னால் நாம் திகைத்து உடைந்துவிடுவோம். பேசவே முடியாது. கர்ணன் அழ ஆரம்பிப்பதைக்கூட இப்படித்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது


சாரங்கன்