Monday, February 26, 2018

சுதர்சனையின் பாதை



ஜெ

சுதர்சனையும் சுப்ரியையைப்போலவே ஆழமான ஒரு பயணத்தில் இருக்கிறாள். அவள் சென்ற வழியில்தான் இவளும் சென்றுகொண்டிருக்கிறாள். அவள் ‘மனம் கலங்கி’ இருக்கிறாள். இவள் வேறுவகையிலே இருக்கிறாள். இருவரும் ஒரே இடத்தில் மாளவத்தில் கருகுமணி காதணிகள் போடுவதில் சென்று தொட்டுக்கொள்கிறார்கள். அந்த மர்மத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் நான் கௌன்சிலிங் வேலையை இருபது வருடம் செய்துவந்தவள். இதை நான் உணர்ந்திருக்கிறேன். நம்மைப்போலவே அவர்களின் மனமும் செல்வதை நாம் எங்கேயாவது உனரும் போது ஒரு பெரிய மன அதிர்ச்சி ஏற்பட்டு திகைப்பு அடைவோம். சுதர்சனை சுதரசனையின் இன்னொரு வடிவம் என நினைக்கிறேன்


எஸ்