Tuesday, February 20, 2018

அவிரதன்


ஜெ,

அவிரதனின் தோளில் பொன் விழும் காட்சியின் யதார்த்தம் பதறச்செய்தது. பொதுவாக இந்தமாதிரித் தருணங்களில் இதெல்லாம் யாருக்கோ நிகழப்போகிறது என்ற எண்ணம்தான் இருக்கும். நமக்கெல்லாம் எப்படி வரும் அது என நினைப்போம். நமக்கு வந்தபின்னரும்கூட நம்மால் அதை நம்பவோ ஏற்கவோ முடியாது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உறைக்கும். மரணத்தை அவனுக்கு அளிக்கும் அந்த இடம் அதன்பின்னர் அவன் எப்படி இருந்தான் என்றெல்லாம் சொல்லி தலைகீழாகச்சென்று அந்த உச்சமாக அமைந்தது சிறுகதைபோல அமைந்திருந்தது.


சதீஷ்