Thursday, February 22, 2018

குலம்



ஜெ

வாழ்நாள் முழுக்க குலம் மதிப்பு மரியாதை என்றுதான் சுப்ரியை பேசிக்கொண்டே இருந்தாள். ஆனால் அதெல்லாமே வரும்போது அவள் அதைக் கவனிப்பதேயில்லை. எனேன்றால் அவை அவளுக்கு முக்கியமல்ல. அவள் மனம் ஈடுபட்டிருப்பது வேறொன்றில். அவளுக்கு கர்ணன்மேல் அன்புண்டா இல்லையா என்பதே சிக்கலான கேள்வி. அவளே அதை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என நினைக்கிறேன். அவள் அதைநோக்கித்தான் செல்கிறாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதோடு அவளுக்கு திரும்பிச்செல்வதைப்பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் உருவாகும் படபடப்பையும் கவனிக்கிறேன். அவள் திரும்பிச்செல்லமாட்டாள் என்று தோன்றுகிறது. எப்போது எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டீர்கள் என்ற கேள்விக்குத் திரும்பிச்செல்லமாட்டேன் என்று தோன்றியபோது என அவள் பதிலும் சொல்கிறாள்.


சபரி