Sunday, August 5, 2018

கால்பந்து



ஜெ

குருசேத்திரத்தில் நடக்கும் அந்தக் கால்பந்து விளையாட்டு வெண்முரசு நாவல்களின் ஓர் உச்சம். இந்த இடத்தை ஒரு தனிநாவலின் கிளைமாக்ஸ் என்று எடுத்துக்கொண்டோம் என்றால் மிகச்சரியாக இந்த இடத்தைநோக்கி மொத்த கதையும் அழகாக ஆரம்பம் முதல் சுருங்கி வருவதைக் காணமுடிகிறது. பீமனிடம் சென்று  பெரீந்தையே என விளையாடும் கௌரவமைந்தர், அபிமன்யூ, மற்ற சின்ன கௌரவர்கள் ஆகிய அனைவரின் கதாபாத்திரங்களும் வாழ்க்கையையே ஒருவகையான விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றன . அவர்களுக்கு போரும் ஒரு விளையாட்டுதான். அந்த விளையாட்டுத்தனத்தின் உச்சம்தான் இப்போது நடந்த இந்த விளையாட்டு. அந்த காட்சி உருவாகும் வரை அப்படி ஒரு காட்சி வரும் என்றே தெரியவில்லை. திடுமென வாசித்தபோது ஒரு கணம் கைகாலெல்லாம் பரபரவென்று ஆகிவிட்டது

ராஜாராம்