Saturday, August 4, 2018

பந்தாட்டம்



அன்பின் ஜெ,

வணக்கம்!

உப பாண்டவர்களும், உப கௌரவர்களும் குருஷேத்திர விளிம்பில் நின்று பந்தாட்டம் விளையாடுகிறார்கள்.

இந்நிகழ்வளிக்கும் உளச்சித்திரம் சொல்லிலடங்காதது.

முழுதாய் ஒப்புக்கொடுத்து, களம் நின்று 
கலகலப்பும்,களியாட்டுமாய் பொழுதுகழிக்கும் இவர்களை எண்ணுகையில் பதட்டமே மிஞ்சுகிறது.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.