Sunday, August 5, 2018

பிள்ளைகள்



ஜெ

குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களின் பிள்ளைகளும் பாண்டவர்களின் பிள்ளைகளும் ஆடும் அந்த விளையாட்டு அற்புதமாக ஒரு அனுபவமாக இருந்த்து. சொல்லப்போனால் ஒரு கிளாஸிக் சினிமாவில் வரும் காட்சி போல. பிள்ளைகளின் உலகம் தனி என்று சொல்ல இதைவிட அருமையான இடம் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே இந்தக்காட்சி வந்துவிட்டது அபிமன்யூ கௌரவர்களின் குழந்தைகள் வாழும் அரண்மனைக்குள் செல்லும்போது அவர்கள் அவனை சிரித்துக்கொண்டாடி வரவேற்பளிக்கும் இடத்தில். அந்தக்காட்சிதான் மீண்டும் வந்திருக்கிறது. அந்த இடமும் அந்தச்சூழலும்தான் அதை ஒரு சோகமான நகைச்சுவையாக ஆக்கிவிட்டன.

ராஜேந்திரன் .எம்.