Saturday, January 5, 2019

ஐந்தாண்டுகள்2



அன்புள்ள ஜெ

மகாபாரதத்தை வெண்முரசாக நீங்கள் எழுதத்தொடங்கி ஐந்தாண்டுகள் முடிவுறுகின்றன. இதை நீங்கள் அறிவித்தபோது இது எப்படிச்சாத்தியம் என்று நினைத்தவர்களில் ஒருவன் நான். இதை நீங்கள் பாதியில் விட்டுவிடுவீர்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு உங்கள் உறுதிக்குறைவு காரணம் ஆக இருக்காது என்று நினைத்தேன். வாசகர்கள் உங்களைப் பின் தொடரமாட்டார்கள். வாசகர்கள் இல்லாமையால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடுவீர்கள் என்றுதான் என் மனம் எண்ணியது. ஆனால் இரண்டுமே நிகழவில்லை. நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். பல்லாயிரம் பேர் வாசித்துக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் இறையருள்தான்

வணக்கத்துடன்

ஆர். ராமசுப்ரமணியன்