Monday, January 7, 2019

நட்பு



அன்புள்ள ஜெ

கர்ணனுக்கும் துரியோதனனுக்குமான நட்பு ஓர் ஆச்சரியம். அவர்கள் இருவருமே no nonsense ஆட்கள். அவர்களுக்கு ரொமாண்டிடிசம் நெகிழ்ச்சி ஏதும் இல்லை. ஆகவே அவர்கள் அன்பைச் சொல்லிக்கொள்வதுகூட இல்லை. ஆனால் ஆத்மார்த்தமான அன்புடனும் இருக்கிறார்கள். ஆகவே அவர்களே அவ்வப்போது சில தருணங்களில் மிக அணுக்கமான ஒரு மன எழுச்சியாகவே தங்களிடையே உள்ள நட்பை உணார்ந்துகொள்கிறார்கள். அந்த இடங்கல் எல்லாமே மிகக்குறைவான சொற்களில் பூடகமாகச் சொல்லப்பட்டு வாசகனிடம் ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன. அனைவரும் சேர்ந்து கர்ணன் துரியோதனனிடம் ஒரு பேரம்பேசவேண்டும் என்று சொல்லும்போது அவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நண்பரை ஆதரிக்கும்பொருட்டு எழும் இடம் உண்மையில் மனதை மிகவும் நெகிழச்செய்தது

மாதவ்