Thursday, January 3, 2019

மௌரியரும் இடும்பரும்




அன்புள்ள ஜெ

கடோத்கஜன் திருமணம் செய்துகொண்ட குடியைப்பற்றி மேலோட்டமாக வந்தது. அப்போது நான் கவனிக்கவில்லை. இப்போது ஒருவர் கடிதத்தில் எழுதியபோதுதான் உறைத்தது. ஆச்சரியமாக இருந்தது. அந்தக்குடியிலிருந்தா மௌரியர்கள் உருவானார்கள்? ஆய்வுமுடிவாகச் சொல்லவில்லை என எனக்கும் தெரியும். பெயரொற்றுமையை மட்டும்தான் நீங்கள் கருத்தில்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கடோத்கஜனின் குடி அழியவில்லை, அது நீண்டநாள் ஆட்சி செய்தது என்பது ஓர் உண்மை. ஆகவேதான் மௌரியர்களின் பூர்விக நிலம் முழுக்க இன்றும் கடோத்கஜன் பார்பாரிகன் இருவருமே தெய்வங்களாக இருக்கிறார்கள். வரலாற்றை புராணம் வழியாகச் சென்றடைவதைப்போல திரில்லான மூளைப்பயிற்சி வேறில்லை

சிவா