Thursday, May 31, 2018

ரக்தபீஜன்




ஜெ

பன்னிருபடைக்களத்தில் ரக்தபீஜனின் கதையை மகனுக்குச் சொல்வதற்காக மீண்டும் வாசித்தேன். முதல் வாசிப்பில் அந்தக்கதையையும் அதை நீங்கள் இண்டெர்பிரெட் செய்திருக்கும் விதத்தையும்தான் கவனித்து வாசித்தேன். இப்போது வாசிக்கும்போதுதான் வரிவரியாக எழுதப்பட்டது அந்தக்கதை என உணர்ந்தேன். இவ்வளவு கூடுதலாக பக்கங்கள் இப்படி வரிவரியாக எழுதப்படும்போது அதற்குரிய வாசிப்பு அதன் தீவிரவாசகர்களிடமிருந்தே கிடைக்க வாய்ப்பில்லை. ரக்தபீஜன் பிளந்து பிளந்து வளர்கிறான். அவனுடைய குருதியின் துளியில் இருந்தே பெருகுகிறான். ஆனால் அவன் உண்மையில் பெருகுவது அவனுடைய எதிரிகளின் எண்ணத்தில்தான் என்பதை  இப்போது வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன். அவனை அஞ்சி அவனைக்கொல்லமுயல்பவர்களின் அச்சம்தான் அவனை வளர்க்கிறது. . “எண்ணியதுமே அவன் எழுகிறான், எண்ணத்தை வெல்ல முயல்கையில் அவ்வெண்ணம் தொட்டு மேலும் பெருகுகிறான்” என்றனர் இளையோர். “போரிடப் பெருகுபவனிடம் பொருதுவதெப்படி?” என குமைந்தனர். என்ற வரி அவனைப்பற்றிய அற்புதமான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறது. இன்று எத்தனை ரக்தபீஜன்கள். ஹிட்லர் ஸ்டாலின் என எல்லாருமே அவர்கள் மீதான அச்சத்தால் வளர்க்கப்பட்டவர்கள்தானே? இன்றைக்கு ஐஎஸ்ஐஎஸ் கூட அப்படித்தானே? அந்தக்கதையையே ஒரு மிகப்பெரிய சைக்காலஜிக்கல் நேரேஷனாக வாசிக்கமுடிந்தது . ஒரு அரசியல் கோணத்தில் புரிந்துகொள்ளமுடிந்தது

அருண்குமார்