Tuesday, May 29, 2018

உரையாடல்




ஜெ

சம்பாபுரியில் அவையில் அவர்களும் உறங்குகிறார்கள். ஆணைகள் முடிந்து அலுவல்நிறைவை அறிவிக்கும் அமைச்சரிடம் கர்ணன்  மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரேஎன்கிறான். அவர் பதிலுக்கு ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லைஎன்றார். கர்ணன் அதற்கு ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்என்றான். அமைச்சர் உடனே  அவையை நோக்கி ”இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்என்றார்.

கர்ணன் எப்படி சம்பாபுரியின் அமைச்சர்களையும் குடிகளையும் கவர்ந்தான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டுசெல்லும் அத்தியாயத்தில் இந்த நகைச்சுவை உரையாடல் வருகிறது. மென்மையான நகைச்சுவை. கவனித்தால் மட்டுமே புன்னகை வருவது. நான் ரேண்டமாக வெய்யோனை எடுத்துப்புராட்டியபோது இந்த வரிகளை வாசித்தேன். அத்தனைபேரும் தூங்கும் சபையில் இரண்டுபேர் மட்டும் இப்படி ஒருவருக்கொருவர் மெல்லிய புன்னகையுடன் சீண்டிப்பேசிக்கொள்வது பிடித்திருந்தது

ஜெயராமன்