Wednesday, May 30, 2018

அழிவற்ற பேரொளி



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சித்திரை வந்தனங்கள்விஷு ஆஷம்சகள்இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ''ஊட்டியில் ஒருநாள்'' படித்துவிட்டு பரவசத்தில்பறக்க துவங்கியவன் இன்னும் கீழிறங்கவில்லைகொன்றை பற்றிய செய்திகளும்ரயில் தண்டவாள புகைப்படங்களும்கொள்ளையின்பம்ஏராளமான பொருட்செலவில்அதி நவீன டிஜிட்டல் கேமராவில் , கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் கிடைக்காதபரவசம் , தங்களின் எழுத்தில் கிடைத்துவிடுகிறதுமழைச்சட்டை அணிந்து பச்சைக்கனவுமஞ்சள் கொன்றை வர்ணனைகள் , சிவப்பு எரிமருள்வேங்கைஅந்திப்பொன் உருகி வழிந்தோடும் மாலைபொழுதுகள் - இப்படி பல வர்ணஜாலங்கள்மாயாஜாலங்கள்சௌந்தர்யலஹரி அனுபவங்கள் எங்களுக்குநம்மால் தொட இயலாதமுத்தமிட்டு தலையில் சூட முடியாத சூரியனைகொன்றைமிக அருகில் காண்பிக்கிறது ; ஆசைகளை நிறைவேற்றுகிறது.
மழலைகளுக்கு தொட்டால்சிணுங்கி செடியை ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யும்பொழுதுகுழந்தை தொடுதிரையில்இலைகளை தொட்டு பார்த்துவிட்டு சுருங்கவில்லையே என நம்பிக்கை இழக்கிறதுதும்பையின் அழகை கண்டு ரசிக்க முதலில்தும்பையின் முன் மண்டியிட்டு சரணடையவேண்டும்நண்பர்களோ விருந்தினர்களோ வீட்டுக்கு வருகிறார்களோ இல்லையோஅந்தி நேரத்தில் வாசலில் வரவேற்றபடி அந்திமல்லி பூத்துவிடுகிறதுபுகுந்த வீட்டுக்கு சென்றவள் பிறந்த வீட்டுக்குவரும்பொழுதெல்லாம் செம்பருத்தி சற்று அதிகமாகவே மலர்கிறது.
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலில் வரும் வரிகள் - '' காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டுகீழே இறங்கி பாதைவிளிம்பில் நின்றுகொண்டு சூரியோதயத்தை பார்த்தேன்.உள்ளங்கால் கூசும்படி விளிம்புக்குச் சென்றேன்முன்னால் அதலபாதாளம்அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன்மனித ஜென்மங்களுக்குக்கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இதுஅதிகாலையிலும் , ஒவ்வொரு நாளும்ஒரே மாதிரியாகவும்அதே சமயம் வெவ்வேறுவிதமாகவும்கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்முடிவற்ற அழகுகளை அள்ளி இறைத்துக் கொண்டு  கடவுள் மனிதன் முன்வருகிறார்தனது விஸ்வரூபத்தை மனிதனுக்கு காட்டக் கடவுள் வருகிறார்இருந்தும் மனிதன் பார்ப்பது இல்லைபழக்கத்தில்அறிவையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் முற்றாக இழந்துதரித்தரத்திலும் பரம தரித்தரனாக நிற்கிறான்.''
''ஒளி எதில் ஒளிந்து கொள்ள முடியும்?''  எனும் போகன் சங்கரின் கேள்விக்கு  ''ஒளி கொண்டவன் தன் ஒளியால்மறையவேண்டியவன்'' என்று வெண்முரசில் விடை கிடைக்கிறது.
இப்பொழுதெல்லாம் உதயங்களையும் அஸ்தமனங்களையும் காணும் பொழுதெல்லாம் வெண்முரசின் நீர்க்கோலம் முதல்அத்தியாயமே நெஞ்சினில் நிறைகிறது.
கதிரவனே,
அழிவற்ற பேரொளியே,
நீரிலாடும் கோலங்கள் நீ.
விண்ணிலாடுவதும்
மண்ணிலாடுவதும்
சொல்லிலாடுவதும்
பொருளில் நின்றாடுவதும்
பிறிதொன்றல்ல.
உன்னை வணங்குகிறேன்.
இச்சிறு பனித்துளியில் வந்தமர்க!
இந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க!
இப்பெருங்கடலை ஒளியாக்குக!
அவ்வான்பெருக்கை சுடராக்குக!
ஆம்அவ்வாறே ஆகுக!
தங்களுடன்தங்களுடைய பயணங்களில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்சூரியனுடன் தொற்றிக்கொள்ளஇயலாவிட்டாலும்கொன்றையுடன் தொற்றிக்கொள்கிறோம்தங்களிடமிருந்து கொன்றை பூவொன்றை தங்க நாணயமாகவும்கொன்றை பூவையும்அதிலுள்ள ஒரு துளி தேனையும் ''கைநீட்டமாக'' பெற்றுக்கொள்கிறோம்.
நன்றி.
அன்புடன்,


ராஜா.