Thursday, May 31, 2018

இசைத்தாளம்




ஜெ,

வெய்யோனில் வரும் வரி இது. யானைகளின் உடலசைவுகளில் அந்த இசைத்தாளம் எதிர்நிகழ்வதை கர்ணன் வியப்புடன் நோக்கினான். அவற்றின் உடலுக்குள் கரியதோலைப்போர்த்தி இன்னொரு இசைக்குழு துள்ளி நடனமிடுவதைப்போல. நான் சமீபத்தில் சென்னையில் திருவிழாவில் யானையைப்பார்த்தேன். தற்செயலாக இந்த வரி கண்ணுக்குப்பட்டது. நீங்கள் நிறைய யானை வர்ணனை செய்திருக்கிறீர்கள். இனி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை என்ற அளவுக்கு. இருந்தாலும் இப்படி ஒரு வரி புதிசாக வருகிறது. வெய்யோனை மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருந்தபோது இது கண்ணுக்குப்பட்டது. நான் அந்நாவலைத்தான் சரியாக வாசிக்கவில்லை என நினைக்கிறேன். வெண்முரசின் ஏராளமான பகுதிகள் அதில்தான் வருகின்றன. ஆனால் அதில் கதை அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்ததுபோலிருந்தது. நாவலாக ஒட்டுமொத்தமாக வாசித்தால்தான் சரியான வடிவம் பிடிகிடைக்குமென நினைக்கிறேன்

அரவிந்த்