Friday, May 18, 2018

ரத்தம்




ஜெ


 இமைக்கணம்தான்நண்பர்கள் நடுவே நிறைய விவாதிக்கவைத்த படைப்பு. நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். உதங்கர்பற்றிப்பேசும்போது கிருஷ்ணர் “அறமென்று ஒன்றை நீங்கள் எப்போதேனும் உங்களுக்காகவேனும் வகுத்துக்கொண்டீர்கள் என்றால் அக்குருதியை தொட்டுவிட்டீர்கள்” 


என்கிறார். அதாவது கிருஷ்ணரின் உச்சகட்ட ஆலோசனை இரண்டின்மை. அதுதான் அத்வைதம். அந்த நிலை அவருக்கில்லை. ஆகவேதான் நல்லநீர் ரத்தம்படிந்த நீர் என்ற பேதம். அது இருக்கும்வரை அமுதம் இல்லை. அந்தபேதமே இல்லாதவர் சுகர்தான்
 மனோகரன்