Thursday, May 24, 2018

அஜபாகன்



ஜெ

வெண்முரசின் பல கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. கதையை ஒற்றை வலைபோல ஆக்குபவை இந்தக் கதாபாத்திரங்கள்தான். நான் அஜபாகன் என்ற சோதிடனின் கதையை மட்டும் தனியாகத் தேடித்தேடி வாசித்துப்பார்த்தேன். ஏராளமான உட்குறிப்புகளை அந்த கதை வழியாக இணைக்க முடிந்தது. அஜபாகன் இன்றைக்கு நடக்கப்போகும் போரை மூன்று தலைமுறைக்கு முன்னரே ஊகித்துச் சொல்லிவிட்டான். இனிமேல்தான் அவன் சொன்னது நடக்கப்போகிறது. இதைக்கண்டுதான் அவன் பைத்தியமாக ஆனான் என இப்போது புரிகிறது

சரவணன்