Tuesday, May 8, 2018

குருதிபடிந்த வரலாறு



ஜெ

வெண்முரசில் பரசுராமனின் கதையை –பார்க்கவகுலத்தின் கதையை இப்போதுதான் வாசித்தேன். தனிநூலாக. அது ஒரு பெரிய காவியம்போல விரிந்து கிடக்கிறது. நீங்களேகூட அதை விரிவாக்கி ஒரு காவியநாவலாக எழுதலாமென நினைக்கிறேன். எத்தனை வஞ்சம். எவ்வளவு ரத்தம். ஒரு பெரிய இனக்குழுச்சண்டையின் குருதிபடிந்த கதை அது

முருகேஷ்