Tuesday, May 22, 2018

நளாயினி, மாயாசீதை




அன்புள்ள ஜெ

திரௌபதி மாயாசீதையின் மறுபிறப்பு என்றும் நளாயினியின் மறுபிறப்பு என்றும் கதைகள் உள்ளன, வெவ்வேறு புராணங்களில். ஒரே கதையில் அருகருகே அவற்றைப் பார்த்தபோது ஒரு வகையான பார்வை உருவாயிற்று. தரிசனம் என்றுகூடச் சொல்லலாம். நளாயினியும் மாயாசீதையும் அடக்கப்பட்ட காமம் கொண்டவர்கள். மாயாசீதை ராமனின் மனைவி, ஆனால் ராமனை அறியவில்லை. அவள் இப்பிறப்பில் எப்படி திரௌபதியாகப்பிறந்தாள், அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் உள்ல உறவு என்ன? அந்த மர்மமான இடத்தை அப்படியே மர்மமாக நீங்களும் கடந்துசென்றிருக்கிறீர்கள்

சாரங்கன்