Friday, May 25, 2018

தனிமை



அன்புள்ள ஜெ,
 
வெண்முரசின் பதினெட்டாவது நாவல் பற்றிய எந்த அறிவிப்பையும் இன்னும் தளத்தில் காண முடியவில்லைஒவ்வொரு வரிசையும் நிறைவுறவெறுமைக்குள் நுழைந்து மீண்டும் ஒரு பயணம் ஊடாக அதனை மீட்டு ஒரு தொடக்கத்துடன் அடுத்த நாவலுக்குள் மூழ்குவது உங்கள் வழமைஇந்தமுறை பயணம் ஏதும் உண்டாவெகு அமைதியாக இருப்பதைப் பார்த்தால் ஏதும் வெளிநாட்டுப் பயணம் போலும்எப்போது அடுத்த நாவலுக்குள்நுழைவீர்கள்?
 
அன்புடன் அனோஜன் பாலகிருஷ்ணன்


அன்புள்ள அனோஜன்

பயணம தனிமை எல்லாமே ஆழ்மனதை தயார் செய்ய, தொடக்கம் பெற. பெரும்பாலும் ஆலயங்களுக்குச் செல்கிறேன். ஒவ்வொரு நாவலுக்கும் வெவ்வேறு ஆலயங்கள். கிராதம் கேதார்நாத் சென்றபின். மதுரா சென்ற பின் நீலம். மூகாம்பிகை சென்றபின் மாமலர். இப்போதும் ஓர் ஆலயநகரில் தனிமையில் இருக்கிறேன்

ஜெ