Saturday, March 30, 2019

அம்பு-2



அன்புள்ள ஜெ

துரோணருக்கு எதிராக அர்ஜுனன் எடுக்கும் அந்த் இறுதி அம்பு எது? ஸ்வம் என்னும் பெயர் சுட்டுவது அவனுடைய ஆணவம் அல்லது பெர்சனாலிட்டியை. ஆனால் அந்த பெர்சனாலிட்டி என்ன? ஆசிரியர் அளித்த அனைத்தையும் திருப்பி அளித்தபின்னர் எஞ்சுவது என்ன? இங்கே கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அவன் அவரை விட்டுப்பிரிந்தபின்னார் அடைந்த அனைத்தையும் அவன் துரோணரால் அளிக்கப்பட்டவை என்று சொல்லி திரும்பி அளிக்கிறான். கடைசியில் எஞ்சியது என்ன? அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விளக்கிக்கொள்வதே சரியானதாக இருக்குமென நினைக்கிறேன்.

சாரங்கன்